நாம் குடிக்கும் டீ விஷமாக மாறும் அபாயம் ? அதிர்ச்சி தகவல் !

Ticker

6/recent/ticker-posts

நாம் குடிக்கும் டீ விஷமாக மாறும் அபாயம் ? அதிர்ச்சி தகவல் !



www.tamilantech.com



நாம் அன்றாடும் வாழ்வில் தினசரி பருககூடியதாக டீ உள்ளது. ஆனால் இந்த டீ யை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து உள்ளது. ஆனால் இதை விட பெரிய ஆபத்து என்னவென்றால் கலப்படம் கலந்த டீயை நாம் தினந்தோறும் அருந்தி வருகின்றோம். இதை பற்றிய செய்தியை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.


சமீபகாலமாக டீ தூளில் ( fake tea powder ) கலப்படம் அதிகரித்துள்ளது. இந்த கலப்பட டீ தூளை தான் தினந்தோரும் நாமும் பயன்படுத்தி வருகின்றோம். மேலும் கடைகளில் பயன்படுத்தபடும் டீ தூள் அனைத்துமே குறைவான விலைக்கு வாங்கபடுகின்ற இவை அனைத்துமே கலப்பட டீ தூள். ஆனால் எந்த ஒரு வாடிக்கையாளரும் இதை கவனிப்பது இல்லை. 10ருபாய் டீ தானே என்று சும்மா இருந்து விடுவோம். ஆனால் நாமே விலை கொடுத்து வாங்கி விஷத்த குடிக்கும் கதை தான்.... இங்கு நடக்கிறது


www.tamilantech.com


மேலும் இந்த கலப்பட டீ தூளில் Coal Tar dye என்ற நிறமூட்டிகள் கலக்கபடுகின்றன. இவைகள் நாம் தலைக்கு அடிக்க கூடிய டைகளில் பயன்படுத்தபடுகின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தகூடியவை.

டீ தூளில் என்ன கலப்பட பொருட்கள் கலக்கபடுகின்றன

1) முந்திரிகொட்டை தோலை காயவைத்து பொடியாக்கி கலக்கபடுகின்றன.

2) நிறத்தை அதிக படுத்துவதற்க்காக சோடியம் கார்பனேட் ரசாயனம் கலக்கபடுகிறது.

3) புளியங்கொட்டை  முழுவதும் அறைத்து கலக்கபடுகின்றன.

4) மேலும் மரதூள், தேங்காய் நார் போன்றவை கலக்கபடுகின்றன.

5) மேலும் பயன்படுத்திய டீ தூளை குப்பையில் இருந்து எடுத்து சென்று. அதில் இதுபோன்று  கலப்படம் செய்து மீண்டும் டீ தூளாக  மாற்றி சந்தையில் விற்பனை செய்யபடுகின்றது.

பொதுவாக ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட்டில் பயன்படுத்தபடும் செயற்க்கை நிறமூட்டிகளின் அளவு 100பிபிம்-க்கு மேல் இருக்ககூடாது. ஆனால் கலப்பட டீ தூளில் கலக்கபடும் நிறமூட்டிகளின் அளவு 2000 பிபிஎம்- க்கு அதிகமாக உள்ளது. மேலும் இதில் மார்டெரசின், கார்மோசின் சன் செட்யெல்லா போன்ற வண்ண நிறமூட்டிகள் கலக்கபடுகின்றன.


 இந்த நிறமூட்டிகளை பயன்படுத்தும் போது டீ யின் நிறம் அதிகமாகவே இருக்கும்.இதன் மனமும் அதிமகமாக இருக்கும் இதனால் கலப்பட  டீயினை நம்மால் சுவையினால் வேறுபடுத்தி பார்க்க இயலாது. இந்த டீ யை தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு முறை குடிக்கும் போது ( Stomach cancer )இரைப்பை புற்றுநோய் வரகூடும்.


www.tamilantech.com


பாதிப்புகள் என்ன 

1) சிறுகுடல் புற்றுநோய் வரகூடும்

2) ( Fatty liver )கல்லீரல் பிரச்சனை வரும்

3) கிட்டினி செயல் இழப்பு ஏற்படும்

4) ( Lungs problem )நுரையீரல் பாதிப்பு ஏற்படும்.

5) Gastric ulcer மற்றும் இரைப்பை கோளாறு போன்றவை முதல் அறிகுறி

6) ) ( Digestive problem (செரிமான பிரச்சனை மற்றும் பசியின்மை போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

7) அதிபடியான ( hydrochloric Acid ) அமிலத்தை சுரக்க செய்து வயிற்று புன் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

8) மூட்டுவலி பிரச்சனையை ஏற்படுத்துகின்றன.

9) இறுதியாக  படிப்படியாக மனிதனை கொள்ள கூடிய விஷமாக இந்த டீ மாறுகிறது.


கலப்பட டீ தூளை எப்படி கண்டுபிடிப்பது ?


www.tamilantech.com


வெள்ளை நிற கண்ணாடி டம்பளரில் சுத்தமான குடிநீரை நிரப்பி கொள்ளுங்கள். அதன் பின்னர் டீ தூளை சிறித அளவு எடுத்து நீரினுள் போடுங்கள்.அதன் பின் ஒரு சில விநாடிகளில் அதன் சாயம் நீரில் கலந்து கலர் மாறினால் அது கலப்பட டீ தூள். ஆனால் சுத்தமான டீ தூள் நீரினுள் கலர் மாற பத்து நிமிடங்கள் ஆகும். இவ்வாறாக எளிதாக கலப்பட டீ தூளை கண்டுபிடித்துவிடலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்