அல்சர் விரைவில் குணமாக என்ன செய்ய வேண்டும் ?

Ticker

6/recent/ticker-posts

அல்சர் விரைவில் குணமாக என்ன செய்ய வேண்டும் ?

  



Ulcer - அல்சர் ஏற்படுவதற்க்கு மிக முக்கிய காரணம் நாம் செய்ய கூடிய தவறுகளில் இருந்து தான் ஏற்படுகின்றன. நாம் சாப்பிட கூடிய உனவுகளை நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். காலை நேர உணவு அல்லது மதிய நேர உணவு தொடர்ச்சியாக சாப்பிடாமல் இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வரகூடும். HCL நமது குடலில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கின்றன. அவை நாம் சாப்பிடும் சாப்பாட்டை சரியாக செரிமானம் அடைய செய்கின்றன. ஆனால் நாம் சாப்பிடமல் இருந்தால் அந்த அமிலம் நமது குடற்சுவரை அரித்துவிடும். ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தால் எதுவும் ஆகி விடாது. ஆனால் அதை தொடர்ச்சியாக செய்யும் போது ஹைட்ரோகுளோரிக் அமிலம்  நமது  குடல் உட்புறம்  அரிக்கபட்டு நாளடைவில் புன்களை ஏற்படுத்துகின்றன. 


மேலும் சரியான நேரத்தில் சாப்பிடுவர்களுக்கும் புன்கள் வருகின்றன. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் அதிகபடியான காரம் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது, சொடாப்பு கலந்து உணவுகளை கடைகளில் தொடர்ச்சியாக சாப்பிடுவது, கோழி கறியை தொடர்ச்சியாக சாப்பிட்டால் நமது தொண்டையில் புன்களை ஏற்படுத்தி பின் அவை குடலுக்கும் சென்றுவிடும். Gas நிறைந்த குளிர்பாணங்களை சாப்பிடுவது, சூடாக உணவுகளை சாப்பிடுவது, பச்சை மிளாகாய் சாப்பிடுவது, காரசட்னி சாப்பிடுவது, ஆல்க்கஹால் அருந்துவது போன்ற அனைத்தும் நீண்ட நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் அது குடற்புன்னுக்கு வழி வகுக்கும்.



( Ulcer ) IBS அல்சர் புன் விரைவில் குணமாக என்ன செய்வது ?


அல்சர் இருக்கும் போது சாப்பிட கூடாத உணவுகள்

1) ஒரு வருடத்திற்க்கு காரம் நிறைந்து உனவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

2) என்னையில் பொறித்த உணவுகள், வறுத்த மீன், பஜ்ஜி, போன்டா, முருக்கு, பகவடா, பொறித்த சிக்கன், நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ் , இது போன்ற உணவுகளை ஆறு மாத காலத்திற்க்கு தொடவே கூடாது.

3) Gas நிறைந்த குளிர்பானங்களை ஒரு வருடத்திற்க்கு சாப்பிட கூடாது. உதாரனமாக pepsi, cock, 7up, cocacola, 

4) குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் இது போன்றவற்றை ஒரு வருடத்திற்க்கு சாப்பிடகூடாது.

5) சுக்கு , மிளகு, இஞ்சி, கிராம்பு இது போன்றவற்றை உணவில் ஒரு வருடத்திற்க்கு சேர்க்க கூடாது.

6) டீ, காபி சாப்பிடுவதை  குறைத்து கொள்ளுங்கள். 

7) தேங்காய் சட்னி புன்கள் சரியாகும் வரை சாப்பிடாமல் இருப்பது நல்லது. சாப்பிட்டால் அதன் பிறகு வயிறு பிரட்டல் அல்லது வயிற்றை பிடுங்குதல் போன்ற உனர்வுகள் ஏற்படும். பின் சரியாகி விடும். எனவே தவிற்ப்பது நல்லது.

8) அமிலம் அதிகமாக உள்ள பழங்கள் சாப்பிட வேண்டாம். உதாரனமாக எலுமிச்சை ஜீஸ் 

9) இனிப்பு அதிமாக சேர்த்து கொள்ள வேண்டாம்.

10) கோழிகறி, மட்டன், நண்டு , ரால் போன்றவற்றை ஆறுமாத காலத்திற்க்கு சாப்பிடகூடாது.

11) மீன் இரண்டு மாத காலம்  சாப்பிடாமல் இருக்க வேண்டும். அதன் பின் குழம்பில் வேகவைத்த மீன் மட்டுமே சாப்பிட வேண்டும். 

12) பாணி பூரி, மற்றும் பூரி, தோசை போன்றவற்றை ஒரு வருடத்திற்க்கு சாப்பிடகூடாது.

13) நெய் சாப்பிடகூடாது.

14) தயிர், மோர், போன்றவை 6 மாதம் உணவில் சேர்க்ககூடாது.

15) பிரியானி போன்ற உணவுகளை ஒரு வருடத்திற்க்கு சாப்பிடகூடாது.

16) உணவில் புளி யை 4 மாதங்களுக்கு சேர்க்கவே கூடாது. புளிப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

17) இரண்டு மாத காலத்திற்க்கு இது போன்ற காய்கறிகள் சாப்பிட வேண்டாம், அவரைகாய், பீட்ரூட், வாழைக்காய். 

18) எந்த உணவு பொருள் சாப்பிட்டாலும் காரம் சேர்க்ககூடாது



சாப்பிடகூடிய உணவுகள்

1) இட்லி, இடியாப்பம், கிழங்கு போன்றவைகள் சாப்பிடலாம்.

2) அரிசி சாதம், அரசி கஞ்சி, தக்காளி ரசம் வைத்து சாப்பிடலாம்.

3) ரஸ்க் ரொட்டி, வெண்ணை கலக்கபடாத ரொட்டி, பிரட்டு

4) காய்கறி வேகவைத்த உருளை கிழங்கு , முள்ளங்கி, சாப்பிடலாம்.

5) பால் சாப்பிடலாம்.

6) வேகவைத்த முட்டை சாப்பிடலாம்.

7) சாம்பார் சாதம் சாப்பிடலாம். 

8) முட்டைகோஸ் சாப்பிடுவதன் மூலம் எளிதில் வயிற்று புன்கள் ஆறிவிடும்.




ஆறுமாத காலத்திற்க்கு பிறகும் மிளகாய் தூள், மிளகாய் சேர்க்காமல் குழம்பு வைத்து சாப்பிடலாம். மேலும் புளி சிரிதளவு சேர்த்து கொள்ளலாம். எளிதில் செரிமானம் ஆக கூடிய காய்கறிகளை சேர்த்துகொள்ளவும்

ஒரு வருடத்திற்க்கு பிறகும் காரம் குறைந்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

மேலே குறிப்பிட்டு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டிய உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் குடற்புன் சரியாகாது. உணவு கட்டுபாடுதான் குடற் புன்னை எளிதில் குணமாக்கும். 




மாத்திரை மருந்துகளின் மூலம் புன்னை குனமாக்க ஆண்டிபயாடிக் கொடுக்கபடும். ஆன்டிபயாடிக் ஒரு வாரத்திற்க்கு மேல் சாப்பிடகூடாது. ஏனென்றால் ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டால் குடற்புண் அதிகமாகும். மேலும் ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிடும் முன் Pantocid அல்லது Pantoprazole போன்ற மாத்திரைகள் கட்டாயம் சாப்பிட வேண்டும். 

ஏனென்றால் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் நாம் சாப்பிடும் பொழுது நமது குடலில் மேலும் அமிலம் சுரப்பதை அதிகபடுத்தும். இந்த அதிகபடியான  அமிலம் சுரப்பதை ஆகாரத்திற்கு முன் சாப்பிட கூடிய மாத்திரைகள் குறைக்கும். எனவே ஆகாரத்திற்க்கு முன் சாப்பிட கூடிய மாத்திரைகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். 

அல்சர் பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். சரியாக கவனிக்காமல் விட்டால் Cancer நோயில் கொண்டு செல்லும். இந்த புன் ஆறாமல் இருந்தால் இறுதியில் புற்றுநோய் வரகூடும். எனவே அல்சர்க்கு மாத்திரை சாப்பிடும் போது மருத்துவர்கள் Cancer வராமல் இருக்க ஒரு சில மாத்திரைகள் கொடுக்கின்றனர். 

நீன்ட காலமாக இருக்ககூடிய புண்கள் கூட பின்பு புற்றுநோயாக மாறுகின்றன. 

புண்கள் குறைவாக இருக்கும் போதே காரமான உணவுகளை தவிர்த்தாலே போதுமானது. ஆனால் அதை பெரிதாக்கி வயிற்றில் வலி ஏற்பட்டுவிட்டால் அது பெரிய ஆபத்தை விளைவிக்கும்.

நன்றி!


கருத்துரையிடுக

0 கருத்துகள்